மனம் தான் மனித வாழ்வின் விளைநிலம் – வேதாத்திரி மகரிஷி

0

மனம் தான் மனிதவாழ்வின் விளைநிலம்

அதை செம்மையாக வைத்துக் கொண்டால் வாழ்வு வளம் பெறும்

🏵 மனதை அடக்க நினைத்தால் அலையும்

அதை அறிய நினைத்தால் அடங்கும்

தவறு செய்வதும் மனம் தான்

இனி தவறு செய்யக்கூடாது என்று தீர்மானிப்பதும் மனம்தான்

💮 அன்றாடம் மனம் பலவிதமான விஷயங்களில் அலையவிட்டு தடுமாற்றம் பெறுகிறது

குறிப்பிட்ட நேரம் தியானம் செய்து மனதை தூய்மைப்படுத்தினால் மனநலம் மேம்பாடு அடையும்

🌼 வாழ்வில் இடையிடையே சிக்கல்கள் ஏற்படுவது இயற்கையே

அதைக் கண்டு மிரள்வது அறிவுடைமை ஆகாது

அவற்றை எப்படி எதிர்கொள்வது என்று சிந்தித்து தீர்வு காண்பதே சிறந்தது

🌺 கவலைப்படுவதால் மட்டுமே சிக்கலில் இருந்து மீளமுடியாது.

இன்னும் சொல்லப்போனால் கவலையின்போது பிரச்னை மேலும் பெரிதாகிவிடும்

🌹 தீர்க்க முடியாத துன்பம் என்ற ஒன்று வாழ்வில் கிடையவே கிடையாது

தீர்க்கும் வழிவகைகளை அறியாமல் தான் நாம் துன்பத்தைக் கண்டு அஞ்சுகிறோம்

திறக்க முடியாத பூட்டு எதுவுமில்லை

அதற்கான சரியான சாவியைத் தேடிப்பிடித்தால் போதும்

💐 வேதாத்திரி மகரிஷி 💐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *