Chennai police commissioner news updates
![](http://chennaivoice.com/wp-content/uploads/2020/06/chennai-city-police.png)
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன் இ.கா.ப., அவர்கள் 19.06.2020 காலை 9.30 மணிக்கு, சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணா சாலை, வாலாஜா சாலை சந்திப்பில் சென்னை பெருநகர காவல் துறையால் ஊரடங்கு சமயத்தில் ட்ரோன் கேமராக்கள் மூலம் மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து கண்காணிப்பு, மற்றும், ட்ரோன் (Drone) ஒலிபெருக்கி மூலம் ஊரடங்கின் கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் சம்பந்தமான விழிப்புணர்வு அறிவிப்புகள் வழங்கப்படுவதை ஆய்வு செய்தார்.
உடன் தெற்கு மண்டல கூடுதல் ஆணையாளர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா இ.கா.ப., கிழக்கு மண்டல இணை ஆணையாளர் திரு.ஆர்.சுதாகர் இ.கா.ப., மற்றும் திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் திரு.கு.தர்மராஜன் இ.கா.ப., ஆகியோர் இருந்தனர்.
![](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t15.13418-10/104385447_3187803104619829_5883368105550563253_n.jpg?_nc_cat=107&_nc_sid=f2c4d5&_nc_ohc=Jno3RBS3RUgAX9BZ1Qw&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=5735c3aecb10f7f78598323286c09548&oe=5F14FE39)